இந்தப் பிள்ளையார் பட்டி கோயிலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கான குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில் காண்போரை வியக்கவைக்கும் தன்மைக் கொண்டது. முன்னர் சிவனை ப்ரதானமாக வைத்துக் கட்டப்பட்ட கோயிலாக இருந்து பின்னர் பிள்ளையார் வழிபாடு பிரசித்தி பெற்று வளர்ந்திருக்கின்றது. இக்குடை
முன்னர் பிள்ளையார்பட்டியைச் சுற்றியுள்ள ஊரின் பெயர் மருதங்குடி என அழைக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டு வாக்கில் பிற்கால பாண்டியர்களிடமிருந்து இங்கிருந்த நகரத்தார் சமூகத்தினர் இந்த மருதங்குடி என்னும் ஊரை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் சான்றாக ஒரு கல்வெட்டு இந்தக் கோயிலிலேயே செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனிடமிருந்து நகரத்தார் சமூகத்தினர் இந்தகரை வாங்கி இங்கிருக்கும் கோயிலையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ளனர்.
- பிள்ளையார்பட்டி கோயில் வலைப்பக்கம்: http://www.
pillaiyarpattitemple.com/ tamil/history.html - பிள்ளையார்பட்டி கோயில் பற்றிய தமிழ் விக்கிபீடியா செய்தி: இங்கே
- விக்கி செய்தி http://en.wikipedia.
org/wiki/Karpaka_Vinayakar_ Temple